×

மூதாட்டியை மறித்து 4 பவுன் நகை பறிப்பு

இடைப்பாடி, ஜன.8: இடைப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி சின்னாகவுண்டர். இவரது மனைவி சின்னபொண்ணு(70). கணவன் இறந்ததால், மகனுடன் வசித்து வரும் சின்னபொண்ணு, கடந்த 5ம் தேதி, வெள்ளரிவெள்ளியில் உள்ள செல்லாண்டி அம்மன் கோயிலுக்கு சென்று விட்டு, கஞ்சியூர் அருகே வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் வந்த 3 பேர், சின்னப்பொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 4 அரை பவுன் செயினை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில், பூலாம்பட்டி எஸ்ஐ அமிர்தலிங்கம் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

The post மூதாட்டியை மறித்து 4 பவுன் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Eadhapadi ,Chinnakounder ,Vellarivelli ,Chinnaponnu ,Chelandi Amman temple ,Kanjiyur ,
× RELATED மின்சாரம் தாக்கி தொழிலாளி காயம்